Friday, March 11, 2016

இறுதித் தூதரும் உலகம் தழுவிய தூதுத்துவமும்!



முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவுகூருவது என்பது சாதாரண ஒரு மனிதனை நினைவுகூர்வதல்ல. அது ஒரு நபியை, ரஸூலை நினைவுகூர்வது. சாதாரண ஒரு நபியை, ரஸூலை நினைவுகூர்வதல்ல. இறுதி நபியை (காதமுந் நபிய்யீன்) நினைவுகூர்வது. உலகில் தோன்றிய அத்தனை இறைதூதர்களுக்கும் தலைவராக (ஸய்யிதுல் முர்ஸலீன்) திகழ்ந்த ஒரு நபியை, ஒரு ரஸூலை நினைவுகூர்வதுதான் முஹம்மத் (ஸல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவுகூர்வதாகும்.

முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நினைவுகூருவது என்பது அவர்கள் கொண்டு வந்த ரிஸாத்தை, வஹியை, தீனை நினைவுகூர்வதாகும்.
அந்த வகையில்நாம் நபி (ஸல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை, அவர்களது வாழ்வை, இறைதூதை, அவர்களுடைய அழைப்பை, அவர்கள் கொண்டு வந்த தீனை, வஹியை நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம். நபியவர்களின் வாழ்வும் வாக்கும் எமது உள்ளங்களில் எப்பொழுதும் பசுமையாக இருக்க வேண்டும். நாம் ஒவ்வொரு தொழுகையிலும், அத்தஹிய்யாத் அமர்விலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை நேரடியாக விளித்து பின்வருமாறு ஸலாம்சொல்கிறோம்:
"உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தும் பரகத்தும் உங்கள் மீது இறங்கட்டும்."